செய்திகள் உலகம்
$6 மில்லியன் மோசடி: 231 பேரிடம் சிங்கப்பூர் போலிசார் விசாரணை
சிங்கப்பூர்:
மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 231 பேரிடம் சிங்கப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
அவர்களில் 66 பேர் பெண்கள். 165 பேர் ஆண்கள். அவர்கள் 14 வயதுக்கும் 84 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடந்த மாதம் 30ஆம் தேதிக்கும் இம்மாதம் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
231 பேரும் 900க்கும் அதிகமான மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்தனர்.
அவற்றில் இணையவர்த்தக மோசடிகள், ஆள்மாறாட்ட மோசடிகள், வேலை மோசடிகள், வாடகை மோசடிகள் போன்றவை அடங்கும்.
மொத்தம் 6.35 மில்லியன் வெள்ளி ஏமாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமமின்றிக் கட்டணச் சேவை வழங்கியது போன்ற குற்றங்களுக்காகச் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
குற்றவியல் சட்டப் பிரிவு 420இன் கீழ் மற்றவர்களை ஏமாற்றும் குற்றத்துக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம்: Media corp
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 13, 2026, 6:16 pm
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறைகள்: பல்கலைக்கழகத்தில் இருவர் உயிரிழப்பு
February 13, 2026, 1:19 pm
இஸ்தான்புலில் இரட்டை கொலை அதிர்ச்சி: விமான நிலையத்தில் இரு சந்தேகநபர்கள் கைதாகினர்
February 13, 2026, 1:17 pm
