செய்திகள் உலகம்
தென்கிழக்கு பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி மூன்று சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்
பாரிஸ்:
தென்கிழக்கு பிரான்சில் உள்ள வால்-டி’இசேர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, மூன்று சறுக்கு (ski) வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் நாளிதழான 'Le Monde' வெளியிட்ட தகவலின்படி, பனிச்சரிவு ஆறு சறுக்கு வீரர்களைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நான்கு பேர் வழிகாட்டியுடன் சென்றிருந்தனர்.
மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றபோதும், மூன்று பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. அனைத்து வீரர்களும் பனிச்சரிவு எச்சரிக்கை ஒளிபரப்பி கருவிகளுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலை சேவையான 'Meteo-France', வியாழக்கிழமை சாவோய் பகுதிக்கு பனிச்சரிவு அபாயம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வால்-டி’இசேர், சாவோயில் அமைந்துள்ள பிரபலமான குளிர்கால விளையாட்டு மையமாகும். சமீப காலமாக இந்தப் பகுதியில் பனிச்சரிவால் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 14, 2026, 10:23 am
$6 மில்லியன் மோசடி: 231 பேரிடம் சிங்கப்பூர் போலிசார் விசாரணை
February 13, 2026, 6:16 pm
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறைகள்: பல்கலைக்கழகத்தில் இருவர் உயிரிழப்பு
February 13, 2026, 1:19 pm
