நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்

ஹைதராபாத்: 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முஹம்மது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. 

இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. எனினும், இந்த பரிந்துரைக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
 
இந்நிலையில், அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, அசாருதீனுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 

இதில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, அசாருதீன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset