
செய்திகள் மலேசியா
கோலாலம்பூரில் '5G' சேவைக்கான சோதனையோட்டம்: டெலிகோம் மலேசியா அறிவிப்பு
கோலாலம்பூர்
இம்மாதம் அரசு முகமை ஒன்றுடன் இணைந்து '5G' சேவைக்கான வெள்ளோட்டத்தை நடத்த இருப்பதாக டெலிகோம் மலேசியா பெர்ஹாட் (TM) தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் மற்றும் இரண்டு நகர்ப்புற மையங்களில் இந்தச் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனம் சனிக்கிழமை அன்று கூறியது.
நாட்டில் '5G' சேவைக்கான சோதனை முன்னோட்டத்தில் பங்கேற்கும் முதல் தொலைத் தொடர்பு நிறுவனம் இதுவாகும். எனினும், அரசாங்கத்தின் '5G' வலைப்பின்னல் சேவையைப் பயன்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதா என்பதை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
அதே வேளையில், நாட்டு மக்களுக்கு '5G' சேவையை வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் அபிலாஷைக்கு (விருப்பத்துக்கு) டெலிகோம் மலேசியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
'5G' சேவைக்கான கட்டணம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில அதிருப்திகளை வெளிப்படுத்தி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 1:44 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மித்ராவின் கீழ் 6 திட்டங்கள்; பிரதமர் ஒப்புதல் வழங்கினார்: டத்தோஸ்ரீ ரமணன்
October 15, 2025, 12:43 pm
மாணவி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக மாணவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்
October 15, 2025, 12:01 pm
மாணவி கத்திக்குத்து வழக்கு; பள்ளிகளில் வன்முறை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
October 15, 2025, 10:43 am
மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுகிறது
October 15, 2025, 10:42 am
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் மக்களுக்கு உணவு கூடைகள் அன்பளிப்பு
October 15, 2025, 9:32 am
பள்ளிகளில் வன்முறைகள் அதிகரிப்பை அனுமதிக்கக் கூடாது: கோபிந்த் சிங்
October 15, 2025, 7:55 am