நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் இலங்கை நாட்டவர் கொலை: இலங்கை நாடாளுமன்றம் கண்டனம்

கொழும்பு:

மதநிந்தனை புகாரில் இலங்கையைச் சேர்ந்தவர் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்; இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற தனது உறுதியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிறைவேற்றுவார் என நம்புவதாக பிரதமர் மகிந்த ராஜபட்ச கூறியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா (40) பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குரான் வசனங்களை அவமதித்ததாக கூறி கும்பலாக கூடி அவரை அடித்து கொலை செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 100 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் பலரை தேடி வருவதாகவும் பஞ்சாப் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset