செய்திகள் ASEAN Malaysia 2025
கிழக்காசிய உச்ச நிலை மாநாட்டிற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியா வந்தடைந்தார்
கோலாலம்பூர்:
கிழக்காசிய உச்ச நிலை மாநாட்டிற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியா வந்தடைந்தார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு, தொடர்புடைய உச்ச நிலை மாநாடுகளுடன் இணைந்து 20ஆவது கிழக்காசிய உச்ச நிலை மாநாடும் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியாவை வந்தடைந்தார்.
லீ அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் மாலை 4.17 மணிக்கு கேஎல்ஐஏ பூங்கா ராயா வளாகத்தில் தரையிறங்கியது,
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவரை வரவேற்றார்.
பின்னர் ராயல் மலாய் படைப்பிரிவின் 1ஆவது பட்டாலியனின் 28 அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய மரியாதை அணிவகுப்பை லீ பார்வையிட்டார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, அவர் 28ஆவது ஆசியான் பிளஸ் த்ரீ உச்ச நிலை மாநாடு, ஐந்தாவது வட்டார விரிவான பொருளாதார கூட்டாண்மை தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு கூடுதலாக நாளை மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
