நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

விடாமுயற்சி, உறுதிப்பாடு, நம்பிக்கையால் குறிக்கப்பட்ட எங்கள் பயணத்தின் கதை இது: திமோர் லெஸ்தே பிரதமர் கண்ணீர் மல்க உரை

கோலாலம்பூர்:

விடாமுயற்சி, உறுதிப்பாடு, நம்பிக்கையால் குறிக்கப்பட்ட எங்கள் பயணத்தின் கதை இது.

திமோர் லெஸ்தே பிரதமர் கேய் ராலா சனானா குஸ்மாவோ உருக்கமாக இதனை கூறினார்.

ஆசியானில் திமோர் லெஸ்தே இணைந்ததன் மூலம் ஒரு கனவு நனவாகி உள்ளது.

இதற்கு விடாமுயற்சி, உறுதிப்பாடு நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட அதன் மக்களின் பயணத்தின் வலுவான உறுதிப்படுத்தும்.

இந்த சாதனை, பகிரப்பட்ட மதிப்புகள், அபிலாஷைகள், கூட்டாக கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தால் பிணைக்கப்பட்ட உண்மையிலேயே ஒன்றுபட்ட நாடுகளின் குடும்பமாக ஆசியானின் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 

திமோர்-லெஸ்தே ஆசியானின் 11ஆவது உறுப்பு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

திமோர் லெஸ்தே மக்களுக்கு, இது வெறும் கனவு நனவாகவில்லை. மாறாக விடாமுயற்சி, உறுதிப்பாடு, நம்பிக்கையால் குறிக்கப்பட்ட எங்கள் பயணத்தின் சக்திவாய்ந்த உறுதிப்படுத்தல் ஆகும்.

ஆசியானைப் பொறுத்தவரை, இது ஒரு தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாகும்.

உண்மையிலேயே ஒன்றுபட்ட நாடுகளின் குடும்பம், பகிரப்பட்ட மதிப்புகள், பகிரப்பட்ட விருப்பங்கள்,  கூட்டாக கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தால் பிணைக்கப்பட்டுள்ளது.

இன்று இங்கு நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் திமோர் லெஸ்தே ஆசியானில் இணைவதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்ட விழாவில் பேசிய  அவர் கண்ணீர் மல்க பேசினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset