செய்திகள் இந்தியா
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
போபால்:
மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூரில் தீபாவளியின்போது கார்பைடு துப்பாக்கிகளை வெடித்த போது பார்வை பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிக்கு தற்போது இந்தூரில் தடை விதிக்கப்பட்டு்ள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளாவர். போபாலில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிஷாவில் உள்ள மருத்துவமனைகளில் 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார்பைடு குழாய் துப்பாக்கிகள் மிகவும் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்ணில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக ஒரு குழந்தைக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேஸ் லைட்டர் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களில் கால்சியம் கார்பைடு ரசாயனத்தை அடைத்து இந்த வகையான துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது.
கால்சியம் கார்பைடு நீருடன் வேதிவினைசேரும்போது அசிட்டிலீன் என்னும் வாயு உருவாகி தீப்பொறி ஏற்பட்டு பெரும் சப்தத்துடன் வெடிக்கிறது. அப்போது சிறிய பிளாஸ்டிக் துகள்கள் துப்பாக்கியை வைத்திருக்கும் நபரின் கண்கள், முகம், தோல் பகுதியில் பட்டு பலத்த காயத்தை ஏற்படுத்துகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
