செய்திகள் இந்தியா
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
போபால்:
மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூரில் தீபாவளியின்போது கார்பைடு துப்பாக்கிகளை வெடித்த போது பார்வை பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிக்கு தற்போது இந்தூரில் தடை விதிக்கப்பட்டு்ள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளாவர். போபாலில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிஷாவில் உள்ள மருத்துவமனைகளில் 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார்பைடு குழாய் துப்பாக்கிகள் மிகவும் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்ணில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக ஒரு குழந்தைக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேஸ் லைட்டர் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களில் கால்சியம் கார்பைடு ரசாயனத்தை அடைத்து இந்த வகையான துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது.
கால்சியம் கார்பைடு நீருடன் வேதிவினைசேரும்போது அசிட்டிலீன் என்னும் வாயு உருவாகி தீப்பொறி ஏற்பட்டு பெரும் சப்தத்துடன் வெடிக்கிறது. அப்போது சிறிய பிளாஸ்டிக் துகள்கள் துப்பாக்கியை வைத்திருக்கும் நபரின் கண்கள், முகம், தோல் பகுதியில் பட்டு பலத்த காயத்தை ஏற்படுத்துகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
