நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியானின் எதிர்காலத்தை வழிநடத்த மலேசியா மூன்று முயற்சிகளைத் தொடங்குகிறது

கோலாலம்பூர்:

ஆசியானின் எதிர்காலத்தை வழிநடத்த  மலேசியா மூன்று முயற்சிகளைத் தொடங்குகிறது.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

2045ஆம் ஆண்டுக்குள் வட்டார சமூகத்தின் திசையின் தூண்களாக இருக்கும் மூன்று முக்கிய முயற்சிகளைத் தொடங்குவதன் மூலம், உள்ளடக்கிய, நிலையான ஆசியான் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மலேசியா ஒரு முன்னணி நிலையை வலுப்படுத்தியுள்ளது.

இந்த மூன்று முயற்சிகள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சிறப்பு மையம், ஆசியான் முன்னோக்கி: ஆசியான் சுற்றுச்சூழல் தொலைநோக்கு 2035,  ஆசியான்2025 இல்: உள்ளடக்கிய, நிலையான எதிர்காலத்தை வடிவமைத்தல் ஆகியவை ஆகும்.

மாறிவரும் உலகத்தை எதிர்கொள்ள ஆசியானை.தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒவ்வொரு முயற்சியும் பல மாத ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள்,  தொலைநோக்குப் பார்வையின் விளைவாகும் என்று அவர் கூறினார்.

அறிவியல், தொழில்நுட்பம், பசுமைப் பொருளாதாரம், நிலையான வளர்ச்சி ஆகிய மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் பிராந்திய வளர்ச்சியைத் தொடர்ந்து இயக்கும் மலேசியாவின் மரபாக இந்த மூன்று முயற்சிகளும் இருக்கும்.

பொருளாதார வளர்ச்சி யாரையும் ஒதுக்கி வைக்கக்கூடாது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்.

ஆசியான் நிலைத்தன்மை, உள்ளடக்க முன்முயற்சியை தலைமை தாங்கி உரையாற்றும்போது அவர் இவ்வாறு 
கூறினார்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ், அறிவியல், தொழில்நுட்பம்,  புதுமை அமைச்சர் சாங் லி காங், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு  துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் ஆகியோரும்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset