செய்திகள் ASEAN Malaysia 2025
47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்காக புரூணை சுல்தான் மலேசியாவுக்கு வருகை
சிப்பாங்:
47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, தொடர்புடைய இதர மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக புரூனே சுல்தான் சுல்தான் ஹஸ்னால் போல்கியா இன்று மலேசியாவை வந்தடைந்தார்.
அவரையும் இளவரசர் அப்துல் மதீன் போல்கியா உள்ளிட்ட புருனே பிரதிநிதிகளையும் ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் மாலை 6.30 மணிக்கு சுபாங்கில் உள்ள ராயல் மலேசிய விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் அவரை வரவேற்றார்.
ஆசியான் உறுப்பு நாடுகளிடையே வட்டார ஒத்துழைப்பு, ஒற்றுமையை வலுப்படுத்துவதில் புரூணை கொண்டுள்ள உறுதியான உறுதிப்பாட்டை சுல்தான் ஹஸ்னால் போல்கியா உச்சநிலை மாநாட்டிற்கான இந்த வருகை நிரூபிக்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
