செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மலேசியா வந்தடைந்தார்
சிப்பாங்:
47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடுடன் இணைந்து ஆசியான் தலைமைத்துவத்தின் விருந்தினராக மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மலேசியாவிற்கு வந்தடைந்தார்.
லூலா, அவரது மனைவி ஜன்ஜா லுலா டா சில்வா, தூதுக்குழுவை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் இன்று மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள புங்கா ராயா வளாகத்தில் தரையிறங்கியது.
மேலும் தோட்ட, மூலப் பொருட்கள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி அவரை வரவேற்றார்.
பின்னர் கேப்டன் முகமது மஸ்ரூர் ஹிதாயத் மஸ்ரி தலைமையிலான ராயல் மலாய் படைப்பிரிவின் 1ஆவது பட்டாலியனின் 28 அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய மரியாதை அணிவகுப்பை லூலா ஆய்வு செய்தார்.
2023 ஜனவரியில் புதிய பதவிக் காலத்திற்கு பதவியேற்ற பிறகு லூலாவின் முதல் அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும் என விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 2:53 pm
ஆசியானின் எதிர்காலத்தை வழிநடத்த மலேசியா மூன்று முயற்சிகளைத் தொடங்குகிறது
October 25, 2025, 12:45 pm
நடுநிலைமைக்கான இடம் குறுகி வருகிறது; ஆசியான் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்
October 24, 2025, 10:53 pm
47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்காக புரூணை சுல்தான் மலேசியாவுக்கு வருகை
October 24, 2025, 8:47 am
ஆசியான் உச்சி மாநாடு: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சந்திப்பை தவிர்க்கிறாரா இந்தியப் பிரதமர் மோடி?
October 21, 2025, 9:41 am
மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் பயணம்
October 15, 2025, 8:04 am
தாய்லாந்து - கம்போடியா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கோலாலம்பூரில் கையெழுத்தாகலாம்: ஹசான்
October 14, 2025, 9:43 am
மியான்மருக்கு தேர்தல் பார்வையாளர்களை ஆசியான் அனுப்பாது: ஹசான்
September 29, 2025, 9:40 am
