
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் கைபேசி குறுந்தகவல் செயலிகளின் மூலம் போதைப்பொருள் பரிமாற்றம்: 50 பேர் கைது
சிங்கப்பூர்:
கைபேசி குறுந்தகவல் செயலிகளின் மூலம் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்ட 50 பேர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களாக சிங்கப்பூர் முழுவதும் பரவலாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பல்வேறு குறுந்தகவல் செயலிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள்களை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அவர்கள் வளைத்துப் பிடித்தனர்.
கைதானவர்களில் ஒருவர் டெலிகிராம் குறுந்தகவல் செயலியைப் பயன்படுத்தி போதைப்பொருள் வாங்கியது தெரிய வந்தது. போலிசார் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட தந்திரங்களையும் மீறி நவம்பர் 16ஆம் தேதி போலிசார் அவரை மடக்கினர். அவரது வீட்டில் இருந்து பல்வேறு பொருள்களைக் கைப்பற்றி உள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, வீட்டில் இருந்து அவரது தந்தை, தன் மகன் தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடப்பாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை இவ்வாறு குறுந்தகவல் மூலம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட 77 பேர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போதைப்பொருளுக்கு 154 பேரை போலிசார் பிடித்தனர். கைதானவர்களில் 70 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது செய்தியாளர்களும் உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm