
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் கைபேசி குறுந்தகவல் செயலிகளின் மூலம் போதைப்பொருள் பரிமாற்றம்: 50 பேர் கைது
சிங்கப்பூர்:
கைபேசி குறுந்தகவல் செயலிகளின் மூலம் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்ட 50 பேர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களாக சிங்கப்பூர் முழுவதும் பரவலாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பல்வேறு குறுந்தகவல் செயலிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள்களை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அவர்கள் வளைத்துப் பிடித்தனர்.
கைதானவர்களில் ஒருவர் டெலிகிராம் குறுந்தகவல் செயலியைப் பயன்படுத்தி போதைப்பொருள் வாங்கியது தெரிய வந்தது. போலிசார் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட தந்திரங்களையும் மீறி நவம்பர் 16ஆம் தேதி போலிசார் அவரை மடக்கினர். அவரது வீட்டில் இருந்து பல்வேறு பொருள்களைக் கைப்பற்றி உள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, வீட்டில் இருந்து அவரது தந்தை, தன் மகன் தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடப்பாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை இவ்வாறு குறுந்தகவல் மூலம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட 77 பேர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போதைப்பொருளுக்கு 154 பேரை போலிசார் பிடித்தனர். கைதானவர்களில் 70 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது செய்தியாளர்களும் உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:42 pm
மியன்மார் பணிப்பெண் மரணம்: போக்குவரத்துக் காவல் அதிகாரிக்கு 10 ஆண்டுச் சிறை
July 18, 2025, 4:55 pm
ஏலத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு விலைபோன விண் வீழ்கல்
July 18, 2025, 4:47 pm
டொனால்ட் டிரம்ப், நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
July 18, 2025, 10:23 am
அதிபர் டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு: வெள்ளை மாளிகை
July 18, 2025, 9:39 am
இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது
July 18, 2025, 12:11 am
இந்தோனேசியா பாணியில் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும்: டிரம்ப்
July 17, 2025, 4:11 pm
Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்
July 17, 2025, 12:14 pm
வெண்ணிலா சுவையிலான பனிக்கூழ் அழிவை நோக்கி செல்கிறது
July 17, 2025, 10:09 am
ஹைட்டி மக்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முயற்சி: மக்கள் அச்சம்
July 16, 2025, 4:15 pm