செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் கைபேசி குறுந்தகவல் செயலிகளின் மூலம் போதைப்பொருள் பரிமாற்றம்: 50 பேர் கைது
சிங்கப்பூர்:
கைபேசி குறுந்தகவல் செயலிகளின் மூலம் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்ட 50 பேர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களாக சிங்கப்பூர் முழுவதும் பரவலாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பல்வேறு குறுந்தகவல் செயலிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள்களை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அவர்கள் வளைத்துப் பிடித்தனர்.
கைதானவர்களில் ஒருவர் டெலிகிராம் குறுந்தகவல் செயலியைப் பயன்படுத்தி போதைப்பொருள் வாங்கியது தெரிய வந்தது. போலிசார் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட தந்திரங்களையும் மீறி நவம்பர் 16ஆம் தேதி போலிசார் அவரை மடக்கினர். அவரது வீட்டில் இருந்து பல்வேறு பொருள்களைக் கைப்பற்றி உள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, வீட்டில் இருந்து அவரது தந்தை, தன் மகன் தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடப்பாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை இவ்வாறு குறுந்தகவல் மூலம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட 77 பேர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போதைப்பொருளுக்கு 154 பேரை போலிசார் பிடித்தனர். கைதானவர்களில் 70 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது செய்தியாளர்களும் உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 12:22 pm
பள்ளி, வீட்டை இலக்காகக் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
February 11, 2026, 11:39 am
காசாவுக்கு 8,000 வீரர்களை அனுப்பத் தயார்: இந்தோனேசியாவின் அதிபர் அறிவிப்பு
February 10, 2026, 3:38 pm
பேங்காக்கில் இரவு நேரச் சந்தையில் தீ விபத்து: 48 கடைகள் சேதம்
February 10, 2026, 11:23 am
நியூயார்க் நகரில் கடும் குளிர்: 18 பேர் பலி
February 9, 2026, 12:58 pm
ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது
February 9, 2026, 12:35 pm
நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலாளர் தீர்ப்பை ரத்து கோரி, மேல்முறையீட்டிற்காக நீதிமன்றத்தை நாடினார்
February 9, 2026, 9:29 am
தாய்லாந்து தேர்தலில் பூமிஜேதாய் கட்சி மகத்தான வெற்றி
February 8, 2026, 11:24 am
சிங்கப்பூர் செந்தோசாவில் முதலை தென்படாததால் மீண்டும் பொது மக்கள் விளையாட அனுமதி: எஸ்டிசி பேச்சாளர்
February 7, 2026, 3:49 pm
நிப்பா வைரஸ்: வங்காள தேசத்தில் பெண் உயிரிழந்ததை WHO உறுதிப்படுத்தியது
February 6, 2026, 11:01 pm
