செய்திகள் உலகம்
காசாவுக்கு 8,000 வீரர்களை அனுப்பத் தயார்: இந்தோனேசியாவின் அதிபர் அறிவிப்பு
ஜகார்த்தா:
காசாவில் முன்மொழியப்பட்டுள்ள பன்முக நாடுகளின் அமைதிப்படை சுமார் 20,000 வீரர்களை கொண்டிருக்கலாம் என்றும், அதில் இந்தோனேசியா அதிகபட்சமாக 8,000 வீரர்களை வழங்க தயாராக இருப்பதாகவும் அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், அந்தப் படையின் பணி நியமன விதிமுறைகள், செயல்படும் பகுதிகள் தொடர்பாக இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அவர் கூறினார்.
இந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பாதுகாப்பு குழுவுடன் நடைபெறும் முதல் கூட்டத்திற்காக பிரபோவோ வாஷிங்டனுக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு, காசா அமைதிப்படைக்காக 20,000 வீரர்களை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தோனேசியா தெரிவித்திருந்தாலும், அதன் பணிக்கட்டளை குறித்த தெளிவான விவரங்களை இன்னும் எதிர்பார்த்து வருகிறது.
அதிபரின் பேச்சாளர் பிரசேத்யோ ஹாடி கூறுகையில், மொத்த எண்ணிக்கை பல நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், துல்லியமான எண்ணிக்கை இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும், இந்தோனேசியா 8,000 வீரர்கள் வரை அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நிரந்தர பாதுகாப்பு சபை உறுப்பினராக சேர்வதற்காக கேட்கப்பட்டுள்ள 1 பில்லியன் டாலர் கட்டணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், ஆனால் பிரபோவோ அந்தக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
இதற்கிடையில், காசாவின் ரஃபா, கான் யூனிஸ் பகுதிகளில் இந்தோனேசிய படைகள் நிறுத்தப்படவுள்ளதாக வெளியான இஸ்ரேல் ஊடக தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்தது. இடமமைப்பு, வீரர் எண்ணிக்கை, கால அட்டவணை உள்ளிட்டவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அதிகாரப்பூர்வ முடிவு, சர்வதேச அனுமதி கிடைத்த பின் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 12:22 pm
பள்ளி, வீட்டை இலக்காகக் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
February 10, 2026, 3:38 pm
பேங்காக்கில் இரவு நேரச் சந்தையில் தீ விபத்து: 48 கடைகள் சேதம்
February 10, 2026, 11:23 am
நியூயார்க் நகரில் கடும் குளிர்: 18 பேர் பலி
February 9, 2026, 12:58 pm
ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது
February 9, 2026, 12:35 pm
நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலாளர் தீர்ப்பை ரத்து கோரி, மேல்முறையீட்டிற்காக நீதிமன்றத்தை நாடினார்
February 9, 2026, 9:29 am
தாய்லாந்து தேர்தலில் பூமிஜேதாய் கட்சி மகத்தான வெற்றி
February 8, 2026, 11:24 am
சிங்கப்பூர் செந்தோசாவில் முதலை தென்படாததால் மீண்டும் பொது மக்கள் விளையாட அனுமதி: எஸ்டிசி பேச்சாளர்
February 7, 2026, 3:49 pm
நிப்பா வைரஸ்: வங்காள தேசத்தில் பெண் உயிரிழந்ததை WHO உறுதிப்படுத்தியது
February 6, 2026, 11:01 pm
