செய்திகள் உலகம்
நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலாளர் தீர்ப்பை ரத்து கோரி, மேல்முறையீட்டிற்காக நீதிமன்றத்தை நாடினார்
நியூசிலாந்து:
2019-ஆம் ஆண்டு இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி, 51 பேரை கொன்ற பிரெண்டன் டாரன்ட், தன்னை குற்றவாளி என அறிவித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு தாக்கல் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஜிம் பயிற்சியாளரான அவர், 2020 ஆகஸ்ட் மாதத்தில் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை பெற்றார். விசாரணை காலத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட போது சரியான முடிவு எடுக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் வாதித்துள்ளார்.
மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தால், அவரது தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனியாக விசாரிக்கப்படும்.
2019 மார்ச் 15 அன்று துப்பாக்கிகளுடன் இரண்டு மசூதிகளில் அவர் தாக்குதல் நடத்தியதுடன், இணையத்தில் அறிக்கை வெளியிட்டு, 17 நிமிடங்கள் நேரலையில் கொலைகளைப் பிரெண்டன் ஒளிபரப்பினார். பலியானவர்களில் அனைவரும் முஸ்லிம்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆவர்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, அந்நேர பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் துப்பாக்கி சட்டங்களைக் கடுமையாக்கி, சமூக ஊடக நிறுவனங்களுக்கு இணைய தீவிரவாதத்தை கட்டுப்படுத்த அழுத்தம் கொடுத்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 9, 2026, 12:58 pm
ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது
February 9, 2026, 9:29 am
தாய்லாந்து தேர்தலில் பூமிஜேதாய் கட்சி மகத்தான வெற்றி
February 8, 2026, 11:24 am
சிங்கப்பூர் செந்தோசாவில் முதலை தென்படாததால் மீண்டும் பொது மக்கள் விளையாட அனுமதி: எஸ்டிசி பேச்சாளர்
February 7, 2026, 3:49 pm
நிப்பா வைரஸ்: வங்காள தேசத்தில் பெண் உயிரிழந்ததை WHO உறுதிப்படுத்தியது
February 6, 2026, 11:01 pm
பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலை படை தாக்குதல்: 69 பேர் பலி: 169-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
February 2, 2026, 2:31 pm
மோசமான செயல்திறன் காரணமாக 1,800 உம்ரா பயண நிறுவனங்களை சவுதி அரேபியா இடைநிறுத்தியுள்ளது
January 31, 2026, 1:12 pm
500 முறைக்கும் மேல் ஊசி குத்தப்பட்ட குழந்தை: சீனாவில் பரபரப்பு
January 30, 2026, 5:41 pm
