செய்திகள் இந்தியா
வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக: பிரசாந்த் கிஷோர்
பாட்னா:
பிஹாரில் 3 ஜன் சுராஜ் வேட்பாளர்களை வாபஸ் பெறக் கோரி பாஜக மிரட்டுவதாக ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டினார்.
இதனால் 3 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
அடுத்த மாதம் 6, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிகார் சட்டமன்ற தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், தேர்தலில் யார் வென்றாலும் கவலையில்லை.
நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்ற பிம்பத்தை பாஜக கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது.
ஆனால், புதிய கட்சியான ஜன் சுராஜ் கட்சியை கண்டு தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுகிறது.
ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வற்புறுத்தப்பட்டுள்ளனர். இதனால் எங்கள் கட்சியின் தனாபூர் வேட்பாளர் முதுர் ஷாவு மனுவை வாபஸ் பெற்றார். பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என தனாபூர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
முதுர் ஷாவை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் கடத்தியதாக பாஜக தலைவர்கள் கூறினர். ஆனால், அவர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் உள்ள போட்டோ வெளிவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்.
எத்தனை வேட்பாளர்களை பாஜக இழுத்தாலும், நாங்கள் இந்த தேர்தலில் கடுமையாக போராடுவோம். பிஹாரில் மாற்றம் வரும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
