செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை வெடித்தது; மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை வெடித்ததில் அதன் அருகில் உள்ள கிராமங்கள் சாம்பலாலும் புகையாலும் சூழப்பட்டுள்ளன.
அதில் ஒருவர் மாண்டார். குறைந்தது 35 பேர் காயமுற்றனர் என்று இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிலர் கட்டடங்களில் சிக்கிக்கொண்டனர். மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

12 கிலோமீட்டர் உயரத்துக்குமேல் எரிமலை சாம்பலைக் கக்கியதாய்த் தெரிவிக்கப்பட்டது.
எரிமலை கக்கும் புகையிலிருந்து தப்பிக்க மக்கள் பீதியில் ஓடியதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும் மோசமான புகை மூட்டத்தினால் மீட்புப்பணிகள் தடைப்பட்டுள்ளன.
-Reuters
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 10:56 pm
இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
April 7, 2026, 12:50 pm
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: திரைமறைவில் நடக்கும் சமாதானப் போர்
April 7, 2026, 11:04 am
விண்வெளியில் புதிய வரலாறு: மனித கண்கள் கண்ட நிலவின் ரகசியம்
April 6, 2026, 4:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் லெபனானில் கொல்லப்பட்ட இந்தோனேசிய வீரர்கள் நல்லடக்கம்
April 6, 2026, 12:32 pm
30 நாட்களில் 50,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளைக் கைப்பற்றியது இலங்கை
April 6, 2026, 11:42 am
முழு பிராந்தியமும் தீக்கிரையாகும்: டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் சபாநாயகர் பதிலடி
April 6, 2026, 11:28 am
