
செய்திகள் ASEAN Malaysia 2025
தாய்லாந்து - கம்போடியா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கோலாலம்பூரில் கையெழுத்தாகலாம்: ஹசான்
கோலாலம்பூர்:
தாய்லாந்து - கம்போடியா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கோலாலம்பூரில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
கோலாலம்பூரில் 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்து கொள்வார்.
கோலாலம்பூர் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் அமைதியை நிலைநாட்டவும், போர் நிறுத்தத்தை கடைபிடிக்கவும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலேசியத் தலைமையின் கீழ் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு, தொடர்புடைய இதர மாநாடுகள், ஆசியான்-அமெரிக்க சிறப்பு உச்ச நிலை மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக டிரம்ப் அக்டோபர் 26 ஆம் தேதி மலேசியாவுக்கு வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:41 am
மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் பயணம்
October 14, 2025, 9:43 am
மியான்மருக்கு தேர்தல் பார்வையாளர்களை ஆசியான் அனுப்பாது: ஹசான்
September 29, 2025, 9:40 am
ஆசியான் தகுதியின் அடிப்படையில் மலேசியாவிற்கு வருகை புரிய டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது: ஃபஹ்மி
August 12, 2025, 10:29 pm
இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்
August 12, 2025, 10:26 pm
செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
July 27, 2025, 9:54 am