
செய்திகள் மலேசியா
வகுப்பறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை; படிவம் 5இன் 4 மாணவர்களுக்கு தடுப்புக் காவல்
மலாக்கா:
வகுப்பறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் படிவம் 5இன் 4 மாணவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலாக்கா மாநில போலிஸ் தலைவர் டத்தோ துல்கைரி மொக்தார் இதனைத் தெரிவித்தார்.
கடந்த வாரம் அலோர்காஜாவில் உள்ள ஒரு பள்ளி வகுப்பறையில் படிவம் 3 மாணவி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, படிவம் 5இல் படிக்கும் நான்கு மாணவர்கள் ஆறு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்பிஎம் வேட்பாளர்களான 17 வயதுடைய அனைத்து ஆண் சந்தேக மாணவர்களுக்கும் எதிராக இன்று முதல் அக்டோபர் 16 வரை மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூத்த உதவிப் பதிவாளர் எஸ்.ஆர். அர்த்தனாவால் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375பி இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இது மேற்கொள்ளப்பட்டது.
வழக்கு இன்னும் போலிஸ் விசாரணையில் உள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் சுருக்கமாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 12:04 am
வகுப்பறையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும்: அன்ட்ரூ டேவிட்
October 11, 2025, 11:25 pm
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான வீடியோ பரவுவதை எம்சிஎம்சி தடுக்க வேண்டும்: கல்வியமைச்சர்
October 11, 2025, 11:15 pm
லெபோ அம்பாங்கிற்கு செட்டித் தெரு என பெயர் சூட்ட வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
October 11, 2025, 11:08 pm
2026 பட்ஜெட் இன வேறுபாடின்றி மக்களை மையமாகக் கொண்டது: டத்தோஸ்ரீ ரமணன்
October 11, 2025, 9:40 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் பினாங்கில் கோலாகலமாக நடைபெற்றது: டத்தோ தனேந்திரன்
October 11, 2025, 4:23 pm
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி: கோபிந்த் சிங்
October 11, 2025, 2:13 pm
தாப்பாவில் 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 11, 2025, 1:05 pm