நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் பினாங்கில் கோலாகலமாக நடைபெற்றது: டத்தோ தனேந்திரன்

பட்டர்வொர்த்:

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் பினாங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை கூறினார்.

பினாங்கு மாநில மக்கள் கட்சியின் தீபாவளி கொண்ட்டாட்டம் பட்டர்வொர்த்தில் உள்ள ஜாலான் கம்போங் பெங்காலியில் நடைபெற்றது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் இந்த அர்த்தமுள்ள கொண்டாட்டத்தைக் கொண்டாட ஒன்றுகூடியதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

மேலும் பினாங்கு ராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த குழந்தைகள் கலந்து கொண்டதால் விழா சிறப்பாக இருந்தது.

அவர்கள் அனைவரும் தீபாவளியின் பண்டிகை சூழ்நிலையை அனுபவித்தனர்.

தேவைப்படும் சமூகத்தின் மீதான அக்கறையின் அடையாளமாக, 250க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ; பெலிதா சமுத்திர பெர்டாமா நிறுவனத்த்தின் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ டத்தோ ரமேஷ், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர்  குமரன் கிருஷ்ணன், பினாங்கு மஇகா தலைவர் டத்தோ தினகரன், பாய் ஷி யின் கலாச்சார, கலை ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் மதர் பாய் ஷி யின், ஸ்ரீ சுபம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முருகேசு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட கௌரவ விருந்தினர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முழு அர்ப்பணிப்பு,  ஒற்றுமை உணர்வுடன் இந்த நிகழ்வை வெற்றிகரமாக்க கடுமையாக உழைத்த முழு பினாங்கு மக்கள் சக்தி கட்சி குழுவிற்கும் எனது  பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி கொண்டாட்டத்தின் உண்மையான உணர்விற்கு ஏற்ப, இந்த கொண்டாட்டம் அன்பு, ஒற்றுமை, சமூகத்தின் மீதான அக்கறையின் அடையாளமாக இருக்கட்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset