
செய்திகள் மலேசியா
தாப்பாவில் 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
தாப்பா:
தாப்பாவில் 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கினார்.
தீபாவளி பெருநாள் வரும் அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இப்பெருநாளை வசதிக் குறைந்த மக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் பரவலாக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் 12 இடங்களில் இன்று தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் என அனைவருக்கும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் அன்பளிப்புகளைப் பெற்று சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன்,
தீபாவளி திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
குறிப்பாக அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2025, 11:25 pm
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான வீடியோ பரவுவதை எம்சிஎம்சி தடுக்க வேண்டும்: கல்வியமைச்சர்
October 11, 2025, 11:21 pm
வகுப்பறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை; படிவம் 5இன் 4 மாணவர்களுக்கு தடுப்புக் காவல்
October 11, 2025, 11:15 pm
லெபோ அம்பாங்கிற்கு செட்டித் தெரு என பெயர் சூட்ட வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
October 11, 2025, 11:08 pm
2026 பட்ஜெட் இன வேறுபாடின்றி மக்களை மையமாகக் கொண்டது: டத்தோஸ்ரீ ரமணன்
October 11, 2025, 9:40 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் பினாங்கில் கோலாகலமாக நடைபெற்றது: டத்தோ தனேந்திரன்
October 11, 2025, 4:23 pm
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி: கோபிந்த் சிங்
October 11, 2025, 1:05 pm
மைதானம் என்பது விளையாடுவதற்கு மட்டுமல்ல, ஒற்றுமைக்கும் அடித்தளம்: பிரதமர் அன்வார்
October 11, 2025, 12:29 pm
கட்டாய மரண தண்டனை; ஒருவரின் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை: டத்தோ சிவக்குமார்
October 11, 2025, 10:18 am