
செய்திகள் மலேசியா
மைதானம் என்பது விளையாடுவதற்கு மட்டுமல்ல, ஒற்றுமைக்கும் அடித்தளம்: பிரதமர் அன்வார்
ஈப்போ:
பேராக்கில் இன்று காலை பந்தர் மேரு ராயாவில் உள்ள புலதன் சுல்தான் அஸ்லான் ஷாவில் 2025 தேசிய விளையாட்டு தினத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
தோல் நிறம், மொழி அல்லது தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் விளையாட்டு என்பது நம்மை ஒன்றிணைக்கும் ஒரு தளம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
மைதானத்தில் குறிப்பாக தடகளத்தில், நாம் ஒரே தேசமாக நிற்கிறோம். அது தான் மலேசியா எனும் தேசம்.
விளையாட்டு என்பது வெற்றியைத் தேடுவதற்கான ஒரு களம் மட்டுமல்ல, மக்களிடையே மன உறுதி, ஒழுக்கம், ஒற்றுமையை வளர்ப்பதற்கான ஓர் இடம்.
விளையாட்டு மனப்பான்மை தொடர்ந்து செழித்து வளர, சாம்பியன்களை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், ஒழுக்கமான, உற்சாகமான, ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வலுப்படுத்தும்.
நாம் அனைவரும் சேர்ந்து விளையாட்டை ஒற்றுமையின் பாலமாகவும், சகோதரத்துவத்தின் களமாகவும், மலேசியாவின் வலிமையின் அடையாளமாகவும் மாற்றுவோம் என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 11, 2025, 4:23 pm
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி: கோபிந்த் சிங்
October 11, 2025, 2:13 pm
தாப்பாவில் 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 11, 2025, 12:29 pm
கட்டாய மரண தண்டனை; ஒருவரின் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை: டத்தோ சிவக்குமார்
October 11, 2025, 10:18 am
விரைவு பேருந்து விளம்பர பதாகையின் கம்பத்தை மோதி விபத்து: ஒருவர் உயிரிழந்தார்
October 11, 2025, 10:17 am
ஆசியான் உச்ச நிலைமாநாட்டில் மியான்மா தேர்தல் திட்டங்கள் விவாதிக்கப்படும்: ஹசான்
October 11, 2025, 10:16 am
2026 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி திவேட் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும்: டத்தோ இப்ராஹிம் ஷா
October 11, 2025, 10:15 am