செய்திகள் உலகம்
விமானத்தில் அசைவ உணவால் உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ்:
கத்தார் வி்மானத்தில் பயணித்த சைவ பயணிக்கு அசைவ உணவு அளித்ததால் அவர் உயிர் இழந்ததாக கூறி, பயணியின் மகன் 1,28,821 டாலர் இழப்பீடு கேட்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது பரபரப்பாகி உள்ளது.
அன்றைய தினம் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டுள்ளார் 85 வயதான அசோகா ஜெயவீரா.
பயணத்தின் போது சைவ உணவு வழங்க வேண்டும் முன்பதிவு செய்த போதும் சைவ உணவு இல்லை அசைவ உணவுதான் உள்ளது என்று கூறி விமான பணிப்பெண் வழங்கி உள்ளார்.
வேறு வழியின்றி அதை வாங்கி சாப்பிட்ட அசோகா ஜெயவீராவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுமுதலுதவி சிகிச்சை அளித்தும் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு வலுக்கட்டாயமாக அளிக்கப்பட்ட அசைவ உணவுதான் காரணம் என்று கூறி அசோகாவின் மகன் சூர்யா ஜெயவீரா 1,28,821 டாலர் இழப்பீடு கேட்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
