
செய்திகள் உலகம்
விமானத்தில் அசைவ உணவால் உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ்:
கத்தார் வி்மானத்தில் பயணித்த சைவ பயணிக்கு அசைவ உணவு அளித்ததால் அவர் உயிர் இழந்ததாக கூறி, பயணியின் மகன் 1,28,821 டாலர் இழப்பீடு கேட்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது பரபரப்பாகி உள்ளது.
அன்றைய தினம் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டுள்ளார் 85 வயதான அசோகா ஜெயவீரா.
பயணத்தின் போது சைவ உணவு வழங்க வேண்டும் முன்பதிவு செய்த போதும் சைவ உணவு இல்லை அசைவ உணவுதான் உள்ளது என்று கூறி விமான பணிப்பெண் வழங்கி உள்ளார்.
வேறு வழியின்றி அதை வாங்கி சாப்பிட்ட அசோகா ஜெயவீராவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுமுதலுதவி சிகிச்சை அளித்தும் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு வலுக்கட்டாயமாக அளிக்கப்பட்ட அசைவ உணவுதான் காரணம் என்று கூறி அசோகாவின் மகன் சூர்யா ஜெயவீரா 1,28,821 டாலர் இழப்பீடு கேட்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 12, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
October 11, 2025, 12:25 pm
டிரம்பின் கனவு கலைந்தது: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு கிடைத்தது
October 11, 2025, 12:02 pm
சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத், மஸ்ஜித் சுல்தான், இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஆதரவில் இன்று மீலாது விழா
October 11, 2025, 8:17 am
ரஷிய கைதி உக்ரைன் போரில் சரணடைந்து தப்பிய குஜராத் இளைஞர்
October 10, 2025, 3:17 pm
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
October 9, 2025, 10:13 pm