செய்திகள் மலேசியா
தேசிய வரலாற்றைப் படைத்த 23 மலேசிய ஆர்வலர்களின் போராட்டம் பெருமையளிக்கிறது: பிரதமர்
புக்கிட்ஜாலில்:
தேசிய வரலாற்றைப் படைத்தத 23 மலேசிய ஆர்வலர்களின் போராட்டம் பெருமையளிக்கிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
உலகளாவிய சுமுத் புளோட்டிலா மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற 23 மலேசிய ஆர்வலர்களின் போராட்டம், தியாகங்கள் மகத்தானது.
பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த மலேசியர்கள் உலகளாவிய ஒற்றுமைக்காக பெரும் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டபோது, காசா மக்களுக்கு உதவி வழங்கும் மனிதாபிமானப் பணி அதன் சொந்த தேசிய வரலாற்றை உருவாக்கியது.
அதிக ஆபத்துகளை எதிர்கொண்ட போதிலும், மனிதாபிமானப் போராட்டத்திற்காக தங்கள் குடும்பங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்த ஜிஎஸ்எப் பங்கேற்பாளர்களின் மனப்பான்மை, தைரியத்தையும் தாம் மதிப்பதாகக் அவர் கூறினார்.
இது பாரிஸுக்கான ஒரு பயணம் அல்ல. இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ள காசாவுக்கு ஒரு பயணம்.
ஒரு தந்தையாக, அவர்கள் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து செல்வதை நான் அறிவேன், ஏனென்றால் நான் நிச்சயமாக கவலைப்படுகிறேன்.
ஆனால், இந்த குழந்தைகள் வரலாற்றை உருவாக்குவதால் நான் அவர்களை மதிக்கிறேன்.
அவர்கள் வெறும் பேசவில்லை, உண்மையான ஜிஹாத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
புக்கிட் ஜாலிலில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் காசாவுடனான ஒற்றுமை கூட்டத்தில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 5:22 pm
உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
