
செய்திகள் உலகம்
பிரான்சில் அரசியல் நெருக்கடி: புதிய பிரதமர் செபாஸ்டியன் பதவி விலகினார்
பாரிஸ்:
நாட்டின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகொர்னு (Sebastien Lecornu) அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்தில் பதவி விலகிவிட்டார்.
புதிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அரசியல்வாதிகள் பலர் எச்சரித்த பிறகு அவர் அந்த முடிவை எடுத்தார்.
லெகொர்னுவின் கூட்டணியினரும் எதிர்த்தரப்பினரும் அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் குறித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சிலர், அமைச்சரவை மிகவும் வலசாரியாக இருக்கிறது என்று குறைகூறினர். வேறு சிலர், அமைச்சரவையில் போதிய வலசாரி அரசியல்வாதிகள் இல்லை என்றனர்.
இன்னும் எவ்வளவு நாள் அரசியல் நெருக்கடி நீடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
லெகொர்னு பதவி விலகிய பிறகு உடனே தேர்தலை நடத்தவேண்டும் என்று வலசாரி கட்சியான National Rally கூறியது.
அதிபர் மக்ரோன் 2022ஆம் ஆண்டில் மீண்டும் பதவியேற்றதிலிருந்து நிலையற்ற சூழல் நிலவுகிறது. மக்ரோனின் தவணையில் இதுவரை இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளில் 5 முறை பிரதமர்கள் மாறிவிட்டனர்.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 3:34 pm
ஜப்பானிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் பிரதமராகத் தேர்வு
October 20, 2025, 3:45 pm
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
October 20, 2025, 2:36 pm
பாரிஸ் அருங்காட்சியகத்திலிருந்து 7 நிமிடத்தில் பிரெஞ்சு அரச நகைகள் கொள்ளை
October 20, 2025, 12:57 pm
தீபாவளி - கனிவன்பின் வலிமையைப் பற்றி சிந்திக்கும் நேரம்: சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ
October 19, 2025, 8:19 pm
சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை
October 19, 2025, 7:51 pm
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm