செய்திகள் மலேசியா
6 மாநிலங்கள் நிலநடுக்க அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன
கோலாலம்பூர்:
நாட்டில் 6 மாநிலங்கள் நிலநடுக்க அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் ஹுவாங் தியோங் சிய் இதனை மக்களவையில் தெரிவித்தார்.
பகாங், திரெங்கானு, பேரா, நெகிரி செம்பிலான், சபா, சரவா ஆகிய ஆறு மாநிலங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மலேசியாவின் கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை, மலேசிய நில அதிர்வு தொழில்நுட்ப வரைபடம் ஆகியவற்றின் செயலில் உள்ள பிழை வரைபட ஆய்வின் வாயிலாக இது கண்டறிந்துள்ளது.
குறிப்பாக இது இயற்கை பேரழிவு அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடியவை என அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா), உள்ளூர் பல்கலைக்கழகங்கள், தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மலேசிய நில அதிர்வு அபாய வரைபடத்தைப் புதுப்பிப்பது தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 5:22 pm
உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
