நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா தன்னார்வலர்கள் பாதுகாப்பாக உள்ளனர்; யோம் கிப்பூர் காரணமாக விடுவிப்பு தாமதமாகிறது: ஹசான்

சிப்பாங்:

ஜிஎஸ்எப் குழுவைச் சேர்ந்த அனைத்து காசா தன்னார்வலர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

யோம் கிப்பூரின் யூத மத விடுமுறை காரணமாக இஸ்ரேலிய தடுப்புக்காவலில் இருந்து 23 மலேசிய ஆர்வலர்களை விடுவிப்பது தாமதமாகியுள்ளது.

விடுமுறை காரணமாக அங்குள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது.

இது குளோபல் சவுத் சீஸ் ஃப்
புளோட்டிலா மனிதாபிமானப் பணியின் ஒரு பகுதியாக இருக்கும் கைதிகளுடனான தொடர்பையும் பாதித்துள்ளது.

இருப்பினும், அனைத்து ஆர்வலர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகவும், அவர்களின் விடுதலைக்காக மலேசிய அரசாங்கம் டெல் அவிவில் உள்ள தூதரகத்தில் உள்ள அதன் சகாக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், கவலைப்பட வேண்டாம். 

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கவலைப்பட வேண்டாம்.

ஆனால் அரசாங்கம் எப்போதும் கண்காணித்து வருகிறது.

அவர்கள் ஒவ்வொரு கணமும், நேரடியாக எப்போதும் கண்காணித்து வருகிறது.

அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, எங்களுக்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

ஆனால், நாங்கள் எதிர்பார்த்தது நடந்தால், சட்ட ஆலோசகர்களாக இஸ்ரேலில் உள்ள அரபு சிறுபான்மை உரிமைகள் மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு  ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டனர்.

அதனால்தான் மலேசியாவைச் சேர்ந்த ஜிஎஸ்எப் பங்கேற்பாளர்களுக்கு, மோசமான விஷயங்கள் நடக்கக் கூடிய யாரையும் தூண்டிவிடாமல் இருக்க, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முழுமையான விளக்கமளிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset