நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் மசீச 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது; ஏழு புதிய முகங்கள்: வீ கா சியோங்

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநிலத் தேர்தலில் மசீச 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதில் ஏழு புதிய முகங்களை மசீச களமிறக்குகிறது என்று டத்தோ வீ கா சியோங் கூறினார்.

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த  தேர்தலில் தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தப் போட்டியிடும் மொத்தம் 15 வேட்பாளர்களில், ஏழு புதிய முகங்களை மசீச களமிறக்குகிறது.

மாநில சட்டமன்ற இடங்களில் நான்கு தற்போதைய உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்வதோடு,

மசீசவின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பல புதிய வேட்பாளர்களையும் கட்சி களமிறக்குகிறது.

பதவியில் தக்கவைக்கப்பட்ட நான்கு தற்போதைய உறுப்பினர்கள் லிங் தியான் சூன் (யோங் பெங்), லீ டிங் ஹான் (பாலோ), டான் சோங் (பெகோக்), டான் எங் மெங் (பெக்கான் நேனாஸ்) என்று அவர் கூறினார்.

மேலும், இந்த முறை முன்னிறுத்தப்படும் வேட்பாளர்களில் ஏழு பேர் இதற்கு முந்தைய எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset