செய்திகள் உலகம்
ஹமாஸ் அமைதிக்கு தயார்; காசா மீது குண்டுவீச்சு நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: டிரம்ப்
வாஷிங்டன்:
ஹமாஸ் அமைதிக்கு தயாராக இருப்பதால் காசா மீது குண்டுவீச்சு நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை கூறினார்.
காஸாவில் அமைதிக்காக அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை பகுதியளவு ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் காலக்கெடுவை அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஹமாஸின் கருத்தை வரவேற்றுள்ள டிரம்ப், நீடித்த அமைதிக்கு ஹமாஸ் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் பதிவில்,
தற்போது ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி அவர்கள் நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நம்புகிறேன்.
காஸாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அப்போதுதான் நாம் பணயக் கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியே அழைத்து வர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
பேசித் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் பற்றியான விவாதங்களில் நாங்கள் ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறோம்.
இது காஸா பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்ட காலமாக தேவையான அமைதி பற்றியது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
சீனாவில் பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இடிந்து விழுந்தது
November 12, 2025, 12:22 pm
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
November 12, 2025, 10:19 am
20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம்: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது
November 10, 2025, 11:15 pm
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
November 10, 2025, 6:22 pm
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை
November 10, 2025, 3:30 pm
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது
November 9, 2025, 3:26 pm
அமெரிக்கா சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை: 39ஆவது நாளாக தொடர்கிறது
November 9, 2025, 2:58 pm
