
செய்திகள் மலேசியா
அரபு - இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில் பிரதமர் தேசிய உரையை வழங்கவுள்ளார்
தோஹா:
அரபு - இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய உரையை வழங்கவுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரபு, இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்டார் சென்றுள்ளார்.
அவர் இன்று இரவு உச்சநிலை மாநாட்டில் தேசிய உரையை வழங்கவுள்ளார்.
ஹமாஸ் தலைமையை குறிவைத்து தோஹாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்தும்,
காசாவில் நடந்து வரும் மனிதாபிமான துன்பங்களை எடுத்துக்காட்டும் வகையிலும் அவரின் தேசிய உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு (மலேசிய நேரப்படி இரவு 11 மணிக்கு) டத்தோஸ்ரீ அன்வார் உச்சி நிலை மாநாட்டில் உரையாற்றுவார்.
கத்தாருடன் மலேசியாவின் அசைக்க முடியாத ஒற்றுமையையும், பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், இஸ்ரேலிய அட்டூழியங்களைக் கண்டிப்பதிலும் அதன் உறுதியான உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 1:13 pm
பழைய குருடி கதவைத் திருடி என்பது போல் மஇகா இனி செயல்பட முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 1:12 pm
பாஸ் நாட்டை வழிநடத்தத் தயாராக இருப்பதாக ஹாடி கோடிக் காட்டினார்
September 15, 2025, 1:11 pm
மலேசியா மடானி என்ற முழக்கம் மக்களை ஏமாற்றுவதாகும்: ஹாடி
September 15, 2025, 12:16 pm
உணவகத்தில் புகைபிடிக்கக் கூடாது என கூறியதால் கோபமடைந்த ஆடவர் தம்பதியினருடன் சண்டையிட்டார்
September 15, 2025, 12:15 pm
கோல குபு பாருவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கிட்டத்தட்ட 400 பேர் சிக்கிக் கொண்டனர்
September 15, 2025, 12:14 pm
4 கார்கள், 2 சுற்றுலா பேருந்துகள் உட்படுத்திய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்
September 15, 2025, 12:13 pm
மலேசிய மருத்துவ மன்றத்தின் புதிய தலைவராக டாக்டர் திருநாவுக்கரசு நியமனம்
September 14, 2025, 10:41 pm