நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கிட்டத்தட்ட 400 பேர் சிக்கிக் கொண்டனர்

உலு சிலாங்கூர்:

கோல குபு பாருவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கிட்டத்தட்ட 400 பேர் சிக்கிக் கொண்டனர்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை கூறினார்.

உலு சிலாங்கூர்  கோல குபு பாரு, கெர்லிங்கில் உள்ள ஒரு முகாம் தளத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டபோது ஒரு கணம் பதட்டத்தை எதிர்கொண்டனர்.

தனது தரப்பினருக்கு அதிகாலை 5.47 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.

கோலா குபு பாரு தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து இயந்திரங்களுடன் ஆறு பேர் கொண்ட குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு பாதிக்கப்பட்ட அனைவரும் உயரமான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பின்னர் நிரம்பி வழிந்த நீர் வடியும் வரை அங்குள்ளவர்களை கண்காணித்தனர்

தற்போது மழை குறைந்து வருவதாகவும், தண்ணீர் வடிந்து வருவதாகவும் அகமது முகலிஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset