
செய்திகள் மலேசியா
போராட்டத்தை தேசிய முன்னணி தொடர வேண்டும்: பிளவுபடக்கூடாது என நஜிப் வலியுறுத்துகிறார்
கோலாலம்பூர்:
போராட்டத்தை தேசிய முன்னணி தொடர வேண்டும். பிளவுபடக்கூடாது என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வலியுறுத்துகிறார்.
தேசிய முன்னணி இளைஞர் பிரிவின் தகவல் இயக்குநர் நியோவ் சூ சியோங் இதனை கூறினார்.
கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை சந்தித்தேன்.
அப்போது முன்னாள் தேசிய முன்னணி தலைவருமான அவர் தேசிய முன்னணி போராட்டத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.
பிளவுபடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் பிளவு கட்சி கூட்டணியை அழிக்கும் என நஜிப் இந்த மனதை உடைக்கும் செய்தியை தனக்கு தெரிவித்ததாக நியோவ் சூ சியோங் கூறினார்.
நீதிமன்றத்தில் இருப்பது கட்சிக்கு விடைபெறுவதற்காக அல்ல என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.
மேலும் நான் நீதிமன்றத்திற்குச் சென்றது விடைபெறுவதற்காக அல்ல, மாறாக டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு மீண்டும் வருக என்று சொல்லும் தருணத்திற்காக முழு பிரார்த்தனைகளுடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்தேன்.
அவரது செய்தி ஆன்மாவைத் துளைத்தது.
அதாவது தேசிய முன்னணியின் போராட்டத்தின் மரபு தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
இது தான் நம்பிக்கை. இதுதான் போராட்டத்தின் உணர்வு. ஒன்றுபட்ட நாம் நிற்கிறோம்.
பிளவுபட்ட நாம் வீழ்கிறோம் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 2:17 pm
தேசிய முன்னணியின் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன: துவான் இப்ராஹிம்
September 12, 2025, 2:15 pm
வெளியேற்றத்தை ஒத்திவைத்து முதலில் விவாதிக்க வேண்டும்: கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை
September 12, 2025, 2:14 pm
பிரதமர் வேட்பாளர்களை கேள்வி கேட்பது மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதற்கான அறிகுறியாகும்: பாஸ்
September 12, 2025, 2:10 pm
நான் ஷாராவின் பெயரைச் சொல்லி அவள் கன்னத்தில் தட்டினேன்; ஆனால் எந்த பதிலும் இல்லை: பாதுகாவலர்
September 12, 2025, 1:41 pm
கொக்கியைப் பகிர்ந்து கொள்ளுங்கள், மீனைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்: ரபிசி
September 12, 2025, 12:57 pm
பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்த மாணவர்கள் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உயர் கல்வியமைச்சை அணுகலாம்: ஜம்ரி
September 12, 2025, 12:08 pm
பாலி வெள்ளம்; இந்தோனேசியாவிற்கு மலேசியா முழு ஆதரவை வழங்கும்: பிரதமர்
September 12, 2025, 11:45 am
ஆணும் பெண்ணும் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர்: கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது
September 12, 2025, 11:41 am