
செய்திகள் மலேசியா
பெர்சத்து மாநாட்டில் கலந்து கொண்ட விவகாரம்: மஇகா கடிதத்திற்காக காத்திருக்கிறது, விளக்கம் அளிக்கவும் தயார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
பெர்சத்து மாநாட்டில் கலந்து கொண்ட விவகாரம் தொடர்பில் மஇகா கடிதத்திற்காக காத்திருக்கிறது.
விளக்கம் அளிக்கவும் மஇகா தயார் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெர்சத்து இளைஞர் பகுதியின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மஇகா இளைஞர் பிரிவினர் கலந்து கொண்டனர்.
இந்த நடவடிக்கைகள் குறித்து தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹித் ஹமிடிக்கு விளக்கம் அளிக்க மஇகா தயாராக உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய முன்னணியிடம் இருந்து மஇகாவுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கடிதமும் வரவில்லை.
மஇகா இன்னும் கடிதத்திற்காகக் காத்திருக்கிறது. அது அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்தவுடன் எழுத்துப்பூர்வ விளக்கத்தை வழங்குவோம் என்று அவர் கூறினார்.
கூடுதலாக சம்பந்தப்பட்ட தலைவருக்கு எதிராக ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டபோது,
இதுவரை எந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படவில்லை என்று டானஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 1:31 pm
தேசிய முன்னணியுடனான பிபிபி கட்சியின் உறவு நீடிக்கும்: டத்தோ லோகபாலா அறிவிப்பு
September 8, 2025, 1:28 pm
சுல்தான் நஸ்ரினை தாக்க முயன்ற பெண் மீது வன்முறை குற்றச்சாட்டு
September 8, 2025, 12:01 pm
பாலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்ததற்காக சூரியா கேஎல்சிசியை பிடிஎஸ் மலேசியா கண்டித்தது
September 8, 2025, 11:41 am
நாட்டின் மீதான அன்பின் உணர்வை வளர்க்க இளம் தலைமுறையினர் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: பிரதமர்
September 8, 2025, 11:27 am
காரில் பெண்ணின் சடலம்; 6 பேர் கைது: போலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் தலைமுறைவு
September 8, 2025, 11:00 am
பிரதமர், அரசுக்கு எதிராக மிரட்டல் செய்திகளைப் பதிவேற்றியதற்காக இரண்டு பேர் கைது: டத்தோ குமார்
September 7, 2025, 9:57 pm