
செய்திகள் மலேசியா
காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த மீலாது விழாவில் 800 பேர் கலந்து கொண்டனர்: டத்தோ அப்துல் ஹமித்
காஜாங்:
காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த மீலாது விழாவில் 800 பேர் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல் தலைவர் பிரபல தொழிலதிபருமான டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
கடந்த சனிக்கிழமை காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் 1500ஆவது மீலாது விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிவாசல் செயலாளர் துவான் முஹம்மது அலி நிகழ்ச்சியை நெறிப்படுத்த உஸ்தாத் அப்துல் நாசர் சிராஜி தொடக்க உரையாற்றினார்.
சிறப்பு பேச்சாளராய் உஸ்தாத் டாக்டர் சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி 'சீரான வாழ்க்கைக்கு சீரத்துந் நபி' அவசியம் என்ற தலைப்பில் மிகச் சிறப்பாய் உரையாற்றினார்கள் .
மதரஸாவின் குழந்தைகள் திருக்குர்ஆனின் வசனங்களை ஓத , மாணவிகள் நபியை புகழ்பாடி கீதம் இசைத்தனர்.
மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அன்பளிப்பு ஊக்கத் தொகையுடன் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இஸ்லாமியப் பெருமக்களும் உலமாக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதுபோன்ற விழாக்கள் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக நடைபெறும்.
அதற்கான முயற்சிகளை காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் மேற்கொள்ளும் என்று டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 1:31 pm
தேசிய முன்னணியுடனான பிபிபி கட்சியின் உறவு நீடிக்கும்: டத்தோ லோகபாலா அறிவிப்பு
September 8, 2025, 1:28 pm
சுல்தான் நஸ்ரினை தாக்க முயன்ற பெண் மீது வன்முறை குற்றச்சாட்டு
September 8, 2025, 12:01 pm
பாலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்ததற்காக சூரியா கேஎல்சிசியை பிடிஎஸ் மலேசியா கண்டித்தது
September 8, 2025, 11:41 am
நாட்டின் மீதான அன்பின் உணர்வை வளர்க்க இளம் தலைமுறையினர் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: பிரதமர்
September 8, 2025, 11:27 am
காரில் பெண்ணின் சடலம்; 6 பேர் கைது: போலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் தலைமுறைவு
September 8, 2025, 11:00 am
பிரதமர், அரசுக்கு எதிராக மிரட்டல் செய்திகளைப் பதிவேற்றியதற்காக இரண்டு பேர் கைது: டத்தோ குமார்
September 7, 2025, 9:57 pm