நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் அதிகாரியை சுட்ட ஆடவர் தேடப்படுகிறார்; பெண்ணின் உடலுடன் காரை விட்டு தப்பியோடினார்: போலிஸ்

ஈப்போ:

போலிஸ் அதிகாரியை சுட்டுவிட்டு தப்பிய ஆடவர் தேடப்படுகிறார். அவ்வாடவர் பெண்ணின் சடலத்துடன் காரை விட்டு தப்பியோடினார்.

பேரா மாநில போலிஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் இதனை தெரிவித்தார்.

இன்று அதிகாலை சிம்பாங் பூலாயில் காரில் ஒரு பெண்ணின் உடலை எடுத்துச் சென்ற ஓர் ஆணுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு போலிஸ் அதிகாரி சுடப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் 26 வயது போலிஸ் அதிகாரியின் வயிற்றில் சுடப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டதோடு, சந்தேக நபரால் அவரது கைத்துப்பாக்கியும் திருடப்பட்டுள்ளது.

சிம்பாங் பூலாய் போலிஸ் நிலைய குற்றத் தடுப்பு ரோந்துக் குழு இன்று அதிகாலை 1.15 மணியளவில் தாமான் தேசா பக்காத்தானில் ஒரு சந்தேகத்திற்கிடமான காரைக் கண்டது.

பணியில் இருந்த அதிகாரிகள் வாகனத்தை நிறுத்த முயன்றபோது, ​​சந்தேக நபர் வேகமாகத் தப்பிச் சென்றார்.

பின்னர் சந்தேக நபரின் கார் ஒரு செம்பனை தோட்டப் பகுதியில் நின்றது.

பின்னர் சந்தேக நபருக்கும் அவரைத் துரத்தி வந்த போலிஸ் அதிகாரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் சந்தேக நபர் அதிகாரியின் ஆயுதத்தைப் பிடித்து வயிற்றில் சுட்டார்.

மேலும் சந்தேக நபர் துப்பாக்கியுடன் தப்பிச் செல்வதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரும் கத்தியால் குத்தப்பட்டார்.

சந்தேக நபர் ஓட்டிச் சென்ற காரை மேலும் ஆய்வு செய்தபோது பின் இருக்கையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டதாக நூர் ஹிசாம் கூறினார்.

பெண்ணின் அடையாளம், இறப்புக்கான காரணத்தை அடையாளம் காண ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை தடயவியல் பிரிவில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset