நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பூலோ மருத்துவமனையில் நடந்த மோதலை தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது

சுங்கைபூலோ:

சுங்கை பூலோ மருத்துவமனையில் நடந்த மோதலை தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

சுங்கை பூலோ மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் ஹபீஸ் முகமட் நோர் இதனை கூறினார்.

இன்று அதிகாலை சுங்கை பூலோ மருத்துவமனையில் இரு கும்பலுக்கு இடையே  மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலை கலைக்க முயன்றபோது ஒரு போலிஸ் அதிகாரியின் முகத்தில் காயம் ஏற்பட்டது.

சுங்கை பூலோ மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் நடந்த சண்டை குறித்து அதிகாலை 2.10 மணிக்கு போலிஸ் துறைக்கு அழைப்பு வந்தது.

உடனே போலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால் மருத்துவமனை போலிஸ் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் ரோந்து குழு வருவதற்கு முன்பே நிலைமையைக் கட்டுப்படுத்த சீக்கிரமாகவே சென்றுவிட்டனர்.

போலிஸ் ரோந்து குழு வந்தவுடன், அந்த அதிகாரியை 40 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்ப தகவல்களின்படி, போலிஸ் அதிகாரி ஆண்கள், பெண்கள் குழுவிற்கு இடையேயான சண்டையை தடுக்க முயன்றார்.

இருப்பினும், ஒரு நபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு போலிஸ் அதிகாரியைத் தாக்கினார்.

இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset