
செய்திகள் மலேசியா
பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் விமரிசையாக நடந்தேறியது
மஞ்சோங்:
நாட்டின் 68 சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பெருவாஸ் தமிழ்ப்பள்ளி சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இம்மாபெரும் கொண்டாட்டத்தை மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மேலும், மஞ்சோங் மாவட்ட காவல் துறை அதிகாரி துவான் டி.எஸ்.பி சேகரன், ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் முனைவர் சேகர் நாரயணன் கலந்து சிறப்பித்தனர்.
இப் பிரம்மாண்டமான நிகழ்வில் பெருவாஸ் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள தேசியப் பள்ளிகள், சீனப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளின் பங்கேற்பு இந்நிகழ்விற்கு முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது. இது போன்ற நிகழ்வில் அனைத்து பள்ளிகளின் பங்கேற்பு, தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு தொடக்கம் என இப்பள்ளியின் தலைமையாசிரியர் குணசீலன் மனோகரன் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மும்மூர்த்தி தெரிவித்தார். இந்நிகழ்வில் மஞ்சோங் மாவட்ட தலைமையாசிரியர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள், சுற்றுவட்டார தலைவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என சுமார் 150 பேர் கலந்து சிறப்பித்தனர்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 10:31 pm
சாரா மூலம் பொருட்களை வாங்குவதற்கான அமைப்பு திருப்தி அளிக்கிறது: பிரதமர்
September 6, 2025, 10:28 pm
எனது அரசியல் எதிர்காலம் கட்சியுடன் பிணைக்கப்படவில்லை: கைரி
September 6, 2025, 10:27 pm
சுங்கை பூலோ மருத்துவமனையில் நடந்த மோதலை தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது
September 6, 2025, 10:25 pm
ஷாரா கைரினா வழக்கின் நோயியல் நிபுணர் சாட்சி, நெட்டிசன்களிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாக போலிசில் புகார்
September 6, 2025, 6:56 pm
புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது
September 6, 2025, 6:38 pm
தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 6, 2025, 4:00 pm
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:28 pm