செய்திகள் மலேசியா
ஆலய திருவிழாவில் துப்பாக்கிச் சூடு; இந்து சமயத்தை இழிவுப்படுத்த வேண்டாம்: மஹிமா வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
ஆலய திருவிழாவில் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் இந்து சமயத்தை இழிவுப்படுத்தும் நடவடிக்கைகளாகும்.
இதை மஹிமா வண்மையாக கண்டிக்கிறது என்று அதன் தலைவர் டத்தோ என். சிவக்குமார் சாடினார்.
பெஸ்தாரி ஜெயாவில் நடந்த ஆலய திருவிழாவின் போது ஒருவர் துப்பாக்கியை கொண்டு வானத்தை நோக்கி சுடுகிறார்.
இச்சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு பலர் கண்டனம் தெரிவிப்பதுடன் பல இதை பற்றி இழிவாகவும் கிண்டலாகவும் பேசுகின்றனர்.
இதனால் இந்து சமயத்திற்கும் அதன் நம்பிக்கைக்கும் தான் இழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஆக இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்கக் கூடாது. மேலும் இது நமது கலாச்சாரமும் அல்ல.
அதன் அடிப்படையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக இதற்கு காரணமானவர்களையும் போலிசார் அடையாளம் காண வேண்டும்.
மேலும் இவ்விவகாரத்தில் போலிசாரின் நடவடிக்கைகளுக்கு மஹிமா முழு ஆதரவு தரும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 1:17 pm
மிரட்டல் அறிக்கைகள் தொடர்பான விசாரணைக்கு உதவ ஜம்ரி வினோத்தை அழைக்க போலிசார் திட்டமிட்டுள்ளனர்
March 12, 2026, 1:15 pm
தொழிலாளர்களை பாதுகாக்க புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்: டத்தோஸ்ரீ ரமணன்
March 12, 2026, 12:23 pm
அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதாக நிஸாமுடின் ஹமீத் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
March 12, 2026, 12:04 pm
அனுதாபத்தை அறுவடை செய்யும் வெளிநாட்டவர்கள்: கோலாலம்பூர் சுற்றுலாத் தலங்களில் போலி அகதிகள்
March 12, 2026, 11:18 am
பொறாமை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் கைது
March 12, 2026, 11:01 am
