நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்-குர்ஆனை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முகநூல் பயனரை  போலிசார், எம்சிஎம்சி இணைந்து தேடி வருகின்றனர்

கோலாலம்பூர்:

அல்-குர்ஆனை மிதித்து, ஆபாசமான வரைபடங்களால் சிதைக்கப்பட்ட படங்களை பதிவேற்றியதாகக் கூறப்படும் நபர்களைக் கண்டறிய  போலிஸ், சமூக ஊடக தளங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் இதனை தெரிவித்தது.

முகநூலில் உள்ள அசல் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

மேலும் 'டிக்கி போர்னியோ' என்ற பெயரைப் பயன்படுத்தி பொறுப்பான கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இதனால் மேலும் விசாரணைகள் தொடரும். 

எம்சிஎம்சியின் மேலும் கண்காணிப்பு, ஒரு சமூக ஊடகக் குழுவில் அதே நபரை உள்ளடக்கியதாக நம்பப்படும் மத அவமதிப்பு கூறுகளைக் கொண்ட பல பதிவுகளையும் அடையாளம் கண்டுள்ளது.

விசாரணை, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அனைத்து தொடர்புடைய உள்ளடக்கங்களும் ஆதாரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்களின் செயல்கள் இஸ்லாத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், பதற்றத்தைத் தூண்டி, மலேசியாவில் உள்ள பல இன, பல மத சமூகத்தின் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் என்று எம்சிஎம்சி கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset