நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர்களை பாதுகாக்க புதிய  பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

பெர்கேசோவின் பயணிகள் திட்டம் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பைப் பெறும் நோக்கத்துடனும், சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லும் மலேசியர்களைப் பாதுகாப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

எந்தவொரு பாதுகாப்புத் திட்டமும் இல்லாத தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது விபத்து அல்லது துரதிர்ஷ்டம் ஏற்பட்டால் தகுந்த பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 400 பேர் அல்ல. சுமார் 400,000 தொழிலாளர்களை உள்ளடக்கியது. 

தற்போது இந்த தொழிலாளர்களில் மொத்தம் 400,000 பேருக்கு பாதுகாப்புத் திட்டம் இல்லை.

எனவே, அவர்கள் வேலைக்குச் செல்லும்போது அல்லது திரும்பும்போது ஏதாவது நடந்தால், அவர்களின் நலனை, அவர்களின் குடும்பங்களை, குழந்தைகள், பெற்றோரை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

அதனால்தான் இந்தப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

நேற்று பெர்கேசோ கோபுரத்தில் நடைபெற்ற மனிதவள அமைச்சின் மார்ச் 2026 மாதாந்திர கூட்டம், நோன்பு திறப்பு விழாவில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

பெர்கேசோவிடமிருந்து அமைச்சு ஒரு முன்மொழிவு ஆவணத்தைப் பெற்றுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் அதைச் செயல்படுத்த உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசிய தொழிலாளர் சமூகத்தை உள்ளடக்கிய சேவைத் துறை, தொழில், பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களை இந்தப் பாதுகாப்பு உள்ளடக்கியது.

இனம், வர்க்கம் அல்லது வேலை வாய்ப்புத் துறையைப் பொருட்படுத்தாமல் யாரும் ஓரங்கட்டப்படக்கூடாது என்ற கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இலக்கிறது இது இணங்குகிறது.

உள்ளூர் பணியாளர்களுக்கு மிகவும் விரிவான, ஆற்றல்மிக்க சமூக பாதுகாப்பு வலையை உறுதி செய்வதற்காக கெசுமா 2026 விபத்து திட்டத்தின் கீழ் இந்த முயற்சி முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.

மேலும் பயணிகள் திட்டத்திற்கு கூடுதலாக, கெசுமா.கிக் தொழிலாளர்கள் சட்டம் 2025 மூலம் தொழிலாளர் பாதுகாப்பை மாற்றுதல், மொபைல் தொழிலாளர் நீதிமன்றங்களை செயல்படுத்துதல், பெர்கேசோ காப்பீட்டு அமைப்பின் கீழ் மகப்பேறு விடுப்பு உதவி கொடுப்பனவுகளுக்கான பெண்கள் பாதுகாப்பு, மறுவாழ்வு மையம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset