செய்திகள் உலகம்
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
ஜாகர்த்தா:
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோ கூறினார்.
பெருவின் லிமாவில் உள்ள தூதரகத்தில் பணிபுரியும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்தது.
இந்த வழக்கு தீர்க்கப்படும் வரை முழுமையான விசாரணை நடத்துமாறு பெருவிய வெளியுறவு அமைச்சையும் உள்ளூர் போலிஸ் துறையையும் தனது தரப்பு கேட்டுக் கொண்டுள்ளோம்.
மேலும் வழக்கின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, உடலை நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு இந்தோனேசிய தூதர் ரிக்கி சுஹேந்தருக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை இரவு லின்ஸ் நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில், பாதிக்கப்பட்ட ஜெட்ரோ லியோனார்டோ பூர்பா தனது மனைவியுடன் சைக்கிளில் சென்றபோது மூன்று முறை சுடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
