
செய்திகள் மலேசியா
பிரதமர் அலுவலகம், அரசு நிறுவனங்கள் குறித்து சுஹாகாம் விசாரிக்க வேண்டும்: நைமா கோரிக்கை
கோலாலம்பூர்:
பிரதமர் அலுவலகம், அரசு நிறுவனங்கள் குறித்து சுஹாகாம் விசாரணை நடத்த வேண்டும்.
மறைந்த துன் டாய்மின் மனைவி நைமா காலிட் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
பிரதமர் அலுவலகம், சட்டத்துறை தலைவர் அலுவலகம், ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள், கவலைகள் குறித்து சுஹாகாம் விசாரணை நடத்த வேண்டும்.
இது தொடர்பில் நைமா சுஹாகாம் தலைவர் ஹிஷாமுடின் யூனுஸிடம் ஆணையத்தின் தலைமையகத்தில் மகஜர் ஒன்றை வழங்கினார்.
மேலும் அவரது குடும்பத்திற்கு அச்சுறுத்தல்கள் உள்ளன என்று கூறி அந்த மகஜரை அவர் ஒப்படைத்தார்.
இது நமது நிறுவனங்களின் நேர்மை, சட்டத்தின் ஆட்சி, ஒவ்வொரு மலேசியரின் உரிமைகள் பற்றியதாகும்.
அமலாக்க முகமைகள் சட்டத்தின் ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.
பொறுப்புக்கூறல் இல்லாமல், அதிகாரம் என்பது ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக மாறுகிறது.
குறிப்பாக இது பாதுகாப்பிற்காக அல்ல என்று நைமா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2025, 10:34 pm
சிகாமட்டில் மீண்டும் 2.5 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 28, 2025, 7:51 pm
கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கியதற்கு 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்: அந்தோனி லோக்
August 28, 2025, 7:47 pm
பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிப்பு; குடியிருப்பாளர்கள் அவதி: சத்தியா
August 28, 2025, 6:47 pm
சிறந்த மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது; பியோன் மலேசியாவிற்கான புதிய அங்கீகாரம்: விக்னேஷ்
August 28, 2025, 5:27 pm
பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: ஃபட்லினா
August 28, 2025, 5:26 pm