நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கியதற்கு 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கிய விவகாரத்திற்கு 24 மணி நேரத்தில் சமர்பிக்க வேண்டும்.

போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

இன்று பிற்பகல் 20 நிமிட மின் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாம், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் 2 நிர்வாகத்திற்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

கேஎல்ஐஏ 2 இல் ஒரு விழாவைத் தொடங்குவதற்கு முன்பு தானே நேரில் கண்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன்.

இன்று நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாளை அமைச்சரவைக் கூட்டம் உள்ளது.

ஒருவருக்கொருவர் விரல் நீட்ட எந்த சாக்குப்போக்குகளையும் நான் கேட்க விரும்பவில்லை.

ஆக விரைந்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று அந்தோனி லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset