
செய்திகள் மலேசியா
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை வெளியேற்ற மலேசியா ஏற்பாடு செய்துள்ளது
புத்ராஜெயா:
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை வெளியேற்ற மலேசியா உரிய ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் தொடர் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் ஆயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து வட இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தனது குடிமக்களை விரைவில் விமானங்கள் மூலம் வெளியேற்ற மலேசியா ஏற்பாடு செய்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல வட இந்திய மாநிலங்களைத் தாக்கிய பெரும் வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிப்பக்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் உள்ள மலேசிய தூதரகத்தின் வாயிலாக இந்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜம்மு, லடாக்கில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் குறித்த அறிக்கைகளை தூதரகம் பெற்றுள்ளது.
தூதரகம் அவர்களை வெற்றிகரமாகத் தொடர்பு கொண்டு, விரைவில் கிடைக்கக்கூடிய விமானத்தில் அவர்கள் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:26 pm
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm
இந்தோனேசியாவில் கலவரம்: தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்து
September 1, 2025, 11:01 am