நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் பாஸ் கட்சிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

அக் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் இதனை கூறினார்.

மத்திய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் இல்லாததால் மஇகா, மசீச கட்சிகளிடையே  அதிருப்தி நிலவி வருகிறது.

இதனால் அக் கட்சிகள் தேசியக் கூட்டணியில் உறுப்பு கட்சிகளாக ஒன்றிணையலாம்.

மஇகா, மசீச தங்கள் சொந்த திசையை தீர்மானிக்க சுதந்திரமாக உள்ளன. அவர்களை எங்களுடன் இணைய வரவேற்கிறோம்.

மஇகா, மசீச எங்களுடன் சேர விரும்பினால், எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஏனெனில் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பிரிவுகளும் ஆதரவாளர்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்.

ஓரங்கட்டப்பட்டதில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி,  மாநில மஇகா தேசிய முன்னணியை  விட்டு வெளியேற முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset