நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அசிலாவின் வாக்குமூலத்தின் மீது நீதித்துறை மறுஆய்வை அல்தான்துயாவின் குடும்பத்தினர் கோருகின்றனர்

கோலாலம்பூர்:

அசிலாவின் வாக்குமூலத்தின் மீது நீதித்துறை மறுஆய்வை அல்தான்துயாவின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

அசிலா ஹாத்ரி சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தின் உள்ளடக்கங்களை விசாரிக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்த, 

மறைந்த மங்கோலிய மாடல் அல்தான்துயா ஷாரிபுவின் குடும்பத்தினர் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி கோரியுள்ளனர்.

அல்தான்துயாவின் தந்தை ஷாரிபு சேதேவ் 2024 செப்டம்பர் 23ஆம் தேதியன்று அசிலாவால் சான்றளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் தொடர்பாக பல உத்தரவுகளைக் கோரி வருவதாக வழக்கறிஞர் சங்கீத் கவுர் தியோ தெரிவித்தார்.

இதில் 2019 அக்டோபர் 17 ஆம் தேதியிட்ட சட்டப்பூர்வ அறிவிப்பும் அடங்கும்.

செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விடுப்பு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset