நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் 2.14 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்; வங்காளதேசத்தவர் மட்டும் 803,322 பேர் உள்ளனர்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் தற்போது 2.14 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிபுரிவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார். 

நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள், ஆவணமற்ற குடியேறிகளின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் கேட்ட கேள்விக்கு சிம் பதிலளித்தார். 

நாடாளுமன்றத்தில் ஸ்டீவன் சிம் எழுத்துப்பூர்வ பதிலில், ஆவணமற்ற குடியேறிகளின் எண்ணிக்கை குறித்த முழுமையான விளக்கத்தை பெற அமைச்சர் குடிநுழைவுத் துறைக்கு பரிந்துரைத்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களில் ஆக அதிக எண்ணிக்கையில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் 803,322 பேர் நாட்டில் உள்ளனர். 

அதற்கு அடுத்த நிலையில் இந்தோனேசியாவைச்சேர்ந்தவர்கள்  543,514 பேர் உள்ளனர். 

மூன்றாவது நிலையில் நேபாள நாட்டைச்சேர்ந்த  332,712 பேரும் மியான்மரைச் சேர்ந்த 173,630 பேரும் இந்தியாவைச்சேர்ந்த தொழிலாளர்கள்  106,929 பேரும் உள்ளனர். 

பாகிஸ்தான் – 76,011, பிலிப்பைன்ஸ் – 52,340, தாய்லாந்து – 21,822, வியட்நாம் – 16,614, இலங்கை – 5,938, கம்போடியா – 5,655, சீனா – 4,796, லாவோஸ் – 1,491, உஸ்பெகிஸ்தான் – 12 கஜகஸ்தான் – 3 ஆகியோர் அந்நிய நாட்டவர் மலேசியாவில் பணிபுரிகின்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset