நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான B40 மலேசியர்கள் இலவச சுகாதார பரிசோதனைத் திட்டத்தைத் தவிர்ப்பது ஏன்?

கோலாலம்பூர்:

மே 31 நிலவரப்படி, B40 பிரிவைச் சேர்ந்த 1.6 மில்லியன் மலேசியர்கள் மட்டுமே சுகாதார அமைச்சகத்தின் (MOH) PeKa B40 திட்டத்தின் கீழ் இலவச சுகாதார பரிசோதனைகளிலிருந்து பயனடைந்துள்ளனர்.

2019 இல் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, 6.9 மில்லியன் Sumbangan Tunai Rahma (STR) பெறுநர்களுக்கு விரிவான சுகாதார பரிசோதனைகளை வழங்குகிறது, இதில் இலவச அடிப்படை பரிசோதனைகள், உடல் பரிசோதனைகள், இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், இரண்டு மருத்துவர் ஆலோசனைகள் ஆகியவை அடங்கும்.

இந்தத் திட்டம் வளர்ந்து வரும் அமைதியான சுகாதார நெருக்கடியிலிருந்து மலேசியர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசிய முயற்சி என்று சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தின் தர உத்தரவாதத் தலைவர் டாக்டர் முஹம்மது அனிஸ் அப்துல் வஹாப் கூறினார்.

இருப்பினும், மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மக்களிடையே சுகாதார கலாச்சாரம் இல்லாததை இது பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

"அவர்கள் சுகாதாரப் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கின்றனர். ஆனால் கடுமையான நோயைக் கண்டறிய விரும்புவதில்லை என்று அவர் சமீபத்தில் பெர்னாமாவிடம் கூறினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெரும்பாலான நோயாளிகள் ஏற்கனவே ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும், ஆரம்பகால தடுப்பு நடவடிக்கைகள் மூலமும்  வழக்கமான பரிசோதனைகள் மூலமும் இதைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற தொற்று அல்லாத நோய்கள் (NCDகள்) மூலம்தான் மலேசியாவில் அதிக இறப்புகள் நிகழ்கின்றன என்று டாக்டர் முஹம்மது அனிஸ் மேலும் கூறினார்.

2017 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) உடன் கூட்டு ஆய்வை மேற்கோள் காட்டி, NCDகள் ஆண்டுதோறும் RM100 பில்லியன் முதல் RM300 பில்லியன் வரை பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன என்றும், ஊழியர்கள் வருகையின்மையால் ஏற்படும் உற்பத்தி இழப்புகள் மட்டும் ஆண்டுக்கு RM12.8 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

"இதுதான் யதார்த்தம். தொற்றா நோய்களால் ஏற்படும் பெரும் பொருளாதாரச் சுமையையும் உற்பத்தித்திறன் இழப்பையும் நாம் காண்கிறோம். தனிநபர்கள் வேலை செய்யவோ அல்லது வேலைக்குச் செல்லவோ முடியாமல், உடல்நலக் குறைவு காரணம் காட்டப்படுகிறது, இதனால் தொழில் உற்பத்தி பாதிப்படைகிறது. இதனால் நாட்டிற்கு பொருளாதாரஇழப்பு ஏற்படுகிறது, இதனை வேலையில்லாமை மற்றும் நிகழ்காலக் குறைப்பு என அழைக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset