நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் மரணமடைந்த தாயாருக்கு தவசம் செய்த மகன் சூர்யா

கோலாலம்பூர்:

தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் மரணமடைந்த தாயாருக்கு மகன் சூர்யா தவசம் செய்துள்ளார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு சோகம் நடந்து ஒரு வருடம் கழித்து தனது மறைந்த தாயின் மறைவை மகன் நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலச் சரிவில் காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணின் மகன், 

துயரத்தின் முதலாமாண்டு நினைவு நாளில் பிரார்த்தனை விழாவை நடத்துவதற்காக அந்த இடத்திற்குத் திரும்பியுள்ளார்.

மறைந்த ஜி. விஜயலட்சுமியின் மகன் எம். சூர்யா, துயரம் நடந்த இடத்தில் தவசம் சடங்கை செய்தார்.

இந்த சடங்கு இறந்தவருக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் மரியாதை ஆகும்.

சூர்யா, மற்றொரு உறவினருடன் சேர்ந்து, பழுதுபார்க்கப்பட்ட நடைபாதையில் ஒரு எளிய சடங்கை நடத்தினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென நில அமிழ்வு ஏற்பட்டு, அவரது தாயார் பாதாள சாக்கடையில் விழுந்து மரணமடைந்தார்.

தவசம் சடங்கின் ஒரு பகுதியாக நில அமிழ்வு ஏற்பட்ட இடத்தில் தனது தாயின் புகைப்படத்தை வைத்து அதை மலர் மாலைகளால் அலங்கரித்து, வாழை இலைகளில் இனிப்புகள், பழங்கள் அவரது தாயாருக்குப் பிடித்த சில உணவுகள் உள்ளிட்ட பிரசாதங்களை சூர்யா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset