
செய்திகள் மலேசியா
பந்தாய் டாலாம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுவசதி இடமாற்ற செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்: ஃபஹ்மி பாட்ஸில்
கோலாலம்பூர்:
அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களின் தற்காலிக தங்குமிடமாக கோலாலம்பூர் நகர மண்டபத்திற்கு (DBKL) மக்கள் வீட்டு வசதித் திட்டத்திற்கு (PPR) இடமாற்றம் செய்யும் செலவை தாம் ஏற்றுக்கொள்வதாக லம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஃபஹ்மி பாட்ஸில் கூறினார்.
தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருக்கும் ஃபஹ்மி, இந்த விவகாரம் குறித்து பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபா, கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முஹம்மத் ஷெரீப் ஆகியோருடன் விவாதிக்கப்பட்டதாகவும், அனைத்துத் தேவைகளும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
"சம்பந்தப்பட்ட குடும்பங்களை நான் சந்தித்தேன்; தற்போது 14 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில், தகுதியுள்ள குடும்பங்களை மாற்று வீடுகளுக்கு மாற்றுவதற்கு கூட்டாட்சி பிரதேச அமைச்சரும் கோலாலம்பூர் மாநகர மேயரும் ஒப்புதல் அளித்தனர்.
"மேலும் எனது அலுவலகம் TNB-யிடமிருந்து பங்களிப்புகளைப் பெற்றுள்ளது, இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் உதவுவோம்," என்று அவர் இன்று இங்கு கலை, கலாச்சார அதிகாரமளிப்புத் திட்டத்திற்கான நிகழ்ச்சிக்கு பிறகு ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“இரண்டாவதாக, DBKL ஆல் விதிக்கப்படும் எந்தவொரு வைப்புத்தொகையும் நான் ஈடுகட்டுவேன். எனவே, அவர்கள் எதையும் செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப நான் அதற்கு நிதி உதவி வழங்கி உதவுவேன்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மைடின் மார்ட், பசராய கார்னிவல் உட்பட 14 வீடுகள், நான்கு கடை வளாகங்கள் அழிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2025, 10:30 pm
தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் இல்லை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஆ. ராசா
August 17, 2025, 7:02 pm
மலேசிய இந்தியர்களின் கல்வித் தந்தை டான்ஸ்ரீ எம்.தம்பிராஜாவிற்கு இரங்கல் கூட்டம்
August 17, 2025, 7:44 am
சுகர் மம்மி மோசடி; இளைஞர்களுக்கு வலை விரிக்கும் மோசடி கும்பல்: எச்சரிக்கும் போலிஸ்
August 16, 2025, 4:45 pm