நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

மலேசியாவில் கட்டமைக்கப்பட்ட இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம் வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.

மலேசியாவின் முதல் உள்ளூர் பயிற்சி பெற்ற பெரிய மொழி மாதிரி ILMU-வின் அறிமுகம் வேலைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது.

காரணம் தொழில்நுட்பமே வேலைகளுக்கு முக்கிய இடையூறாக இருக்காது.

இப்புதிய திட்டம் ஒரு  தொழிலாளர்களை கூட  இடமாற்றம் செய்யாது.

இல்மு பொதுவாக செயற்கை நுண்ணறிவு பற்றிய கேள்வியாகும்.

ஆனால்  நிச்சயமாக, செயற்கை நுண்ணறிவு வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாங்கள் ஆரம்பத்திலிருந்தே இதைச் சொல்லி வருகிறோம். ஆனால் இது புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

ஒய்டிஎல் உருவாக்கிய இல்மு மாதிரியை அறிமுகப்படுத்திய பிறகு அமைச்சர் கோபிந்த் சிங் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset